மெல்பெர்ன், மார்ச் 4 – ஆஸ்திரேலியாவுக்கு நான்கு நாள் பணிநிமித்தப் பயணத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிற்கு இன்று விக்டோரியாவில் உள்ள அரசு மாளிகையில் சடக்குப்பூர்வ வரவேற்பு நல்கப்பட்டது.
பிரதமர் அன்வாரை விக்டோரியாவின் ஆளுநர் மார்கரெட் கார்டனர் மற்றும் ஆஸ்திரேலியாவின் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஆகியோர் வரவேற்றனர்.
இந்த சடங்குப்பூர்வ வரவேற்பு 2வது ஆஸ்திரேலியா-மலேசியா வருடாந்திர தலைவர்கள் கூட்டம் (ஏ.எல்.எம்.) மற்றும் இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு முன் நடைபெற்றது.
ஆஸ்திரேலியப் பிரதமர் அல்பனீஸின் அழைப்பின் பேரில் அன்வர் நேற்று கான்பெராவுக்கு வருகை மேற்கொண்டுள்ளார். அவரது பயணம் எதிர்வரும் மார்ச் 7 ஆம் தேதி நிறைவு பெறுகிறது.
இது ஆஸ்திரேலியாவுக்கான அன்வாரின் முதல் பணி நிமித்தப் பயணமாகும். மேலும் அவர் ஏ.எல்.எம் கூட்டம் மற்றும் ஆசியான்- உச்சநிலை மாநாட்டில் மலேசிய பேராளர் குழுவுக்குத் தலைமையேற்கிறார்.