SELANGOR

ஸ்கிம் மெஸ்ர ஊசிய எமாஸ் வவுச்சர்கள் வழங்கும் நிகழ்வு – டெங்கில்

டெங்கில், மார்ச் 11: இன்று காலை (ஸ்கிம் மெஸ்ர ஊசிய எமாஸ்) முதியோருக்கான வவுச்சர்கள் வழங்கும் நிகழ்வு மற்றும் ஏஹ்சான் ரஹ்மா விற்பனை ஆகியவை டெங்கில் பொது மண்டபத்தில் நடைபெற்றது.

இத்திட்டத்தில் மொத்தம் 300 மூத்த குடிமக்கள் ஸ்கிம் மெஸ்ர ஊசிய எமாஸ் வவுச்சர்களைப் பெற்றனர்.

மேலும், 250 டெங்கில் குடியிருப்பாளர்கள் எஹ்சான் ரஹ்மா விற்பனையில் குறைந்த விலையில் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கினர்.

இன்று டெங்கிலில் நடைபெற்ற இந்த இரண்டு நிகழ்வுகளும் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் திட்டமாகும் என தெரிவிக்கப்பட்டது.

மக்களுக்கு பயனளிக்கும் இந்நிகழ்வை ஸ்ரீ டெங்கில் மற்றும் தீமா லங்காட் மண்டல கவுன்சிலர்கள், டெங்கில் தொகுதியின் KKI  மற்றும் AMK சிப்பாங் கிளை ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த திரு. சுகுமாரன் மற்றும் திரு. லீ கான் மிங் அவர்களுக்கு பொதுமக்கள் தங்கள் நன்றியை தெரிவித்தனர்.


Pengarang :