NATIONAL

மாமன்னர் மற்றும் பேரரசியார் ரம்ஜான் அல்-முபாரக் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்

கோலாலம்பூர், மார்ச் 12: மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் பேரரசியார் ராஜா ஸரித் சோஃபியா ஆகியோர் நாடு முழுவதும் உள்ள அனைத்து முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்களுக்கும் ரம்ஜான் அல்-முபாரக் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் தனது முகநூல் பதிவில், இந்த புனிதமான ரம்ஜான் மாதத்தை முஸ்லிம்கள் தங்கள் மத நடைமுறைகளை மேம்படுத்துவதற்கும், சக விசுவாசிகளிடையே சகோதரத்துவத்தை வலுப்படுத்துவதற்கும் பயன்படுத்திக் கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

மலேசியா தொடர்ந்து ஆசீர்வதிக்கப்படவும், அச்சுறுத்தல்கள், மற்றும் பேரழிவுகளிலிருந்து பாதுகாக்கப்படவும், பிரார்த்தனையில் தன்னுடன் சேருமாறு அனைத்து இஸ்லாமியர்களையும் அழைத்தார்.

– பெர்னாமா


Pengarang :