ஷா ஆலம், ஏப் 22: புக்கிட் பெருந்துங்கில் உள்ள சமூக பூங்காவில் 13,000 பாலைவன மணிப்பூ மரங்களை நடுவதன் மூலம் உலு சிலாங்கூர் நகராண்மை கழகம் (எம்பிஹெச்எஸ்) மலேசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் (எம்பிஓஆர்) புதிய சாதனை படைத்துள்ளது.
உலக நிலப்பரப்பு கட்டிடக்கலை மாதத்தின் (WLAM) கொண்டாட்டத்தை முன்னிட்டு உலு சிலாங்கூர் நகராண்மை கழக நிலப்பரப்பு துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் ஊழியர்கள், அரசு நிறுவனப் பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட சமூகங்கள் அடங்கிய 170 நபர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
“பாலைவன மணிப்பூவின் 13,000 விதைகளின் அல்லது அதன் அறிவியல் பெயர் ருயெலியா சிம்ப்ளக்ஸ் உலு சிலாங்கூரில் உள்ள 13 முகிம்களின் அடையாளமாகும்” என்று முகநூலில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியை எம்பிஎச்எஸ் உதவிச் செயலாளர் ஷைபுல் ரிஸ்ஸா பியாமின் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். மேலும், இதில் தேசிய நிலப்பரப்பு துறை மற்றும் மலேசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
காலை 7.30 மணிக்குத் தொடங்கி 8 மணி நேரத்திற்கும் மேலாக இந்நிகழ்வு நடைபெற்றது என உலு சிலாங்கூர் நகராண்மை கழகம் தெரிவித்தது.
இந்த நிகழ்ச்சியை வெற்றிபெறச் செய்த அனைவருக்கும் நன்றி, நீங்கள் அனைவரும் இல்லாமல் இத்திட்டம் வெற்றி அடைந்திருக்கிறது, என்று தெரிவிக்கப்பட்டது.