SELANGOR

ஷா ஆலம் மாநகராட்சியால் 16 மறுசுழற்சி மையங்கள் ஏற்பாடு

ஷா ஆலம், மே 2: ஷா ஆலம் மாநகராட்சியால் அமைக்கப்பட்டுள்ள 16 மறுசுழற்சி மையங்களுக்கு மக்கள் பொருட்களை அனுப்பலாம்.

பொதுமக்கள், மின்சாரம் மற்றும் மின்னணு கழிவுகள், புத்தகங்கள், ஆடைகள், கண்ணாடி பாட்டில்கள், பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய், அலுமினியம் மற்றும் கேன்கள் ஆகிய மறுசுழற்சி செய்யக்கூடிய எட்டு வகைப் பொருட்களை கொண்டு வரலாம் என மாநகர மன்றம் பட்டியலிட்டுள்ளது.

மேலும் தகவல்களுக்குப் பொதுமக்கள் ஷா ஆலம் மாநகராட்சியின் பொது சுகாதாரம் மற்றும் கழிவு நிலைத்தன்மை துறையை 03-5510 5133 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


Pengarang :