ANTARABANGSA

சீனாவின் விரைவுச் சாலைப் பகுதி இடிந்து விழுந்ததில் 36 பேர் உயிரிழப்பு

குவாங்டோங், மே 2 – சீனாவின் குவாங்டோங் மாகாணத்தில் உள்ள விரைவுச் சாலைப் பகுதி இடிந்து விழுந்ததில் 36 பேர் உயிரிழந்தனர், 30 பேர் காயமடைந்தனர். மேலும், வாகனங்கள் புதையுண்டது.

இச்சம்பவம் கனமழை காரணமாகப் புதன்கிழமை அதிகாலை 2.10 மணியளவில் “Meizhou-Dabu“ விரைவுச் சாலையில் ஏற்பட்டது என சின்ஹூவா செய்தி நிறுவனம் தெரிவித்தது. அதில் இடிந்து விழுந்த பகுதி 17.9 மீட்டர் நீளம் கொண்டது மற்றும் 23 வாகனங்கள் அதில் புதையுண்டது.

தெற்கு சீனாவின் குவாங்டோங்கில் உள்ள பகுதிகளில் மீஜோவும் ஒன்றாகும். இந்த இடம் ஏப்ரல் பிற்பகுதியிலிருந்து கடுமையான மழை மற்றும் ஆலங்கட்டி மழையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆபத்தான மண்சரிவு ஏற்பட்டு வீடுகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்தன.

– ராய்ட்டர்ஸ்


Pengarang :