SELANGOR

இவ்வார இறுதியின் மேலும் எட்டு இடங்களில் மலிவு விற்பனை

ஷா ஆலம், மே 10: அரிசி, முட்டை போன்ற பல்வேறு அடிப்படைப் பொருட்களை மலிவு விலையில் விற்கும் ஜுவாலான் எஹ்சான் ரஹ்மா திட்டம் இவ்வார இறுதியின் மேலும் எட்டு இடங்களில் காலை 10 மணிக்குத் தொடரும்.

நாளை கம்போங் மத்தாங் பகார் (மஸ்ஜிட் மாதாங் பகார் வளாகம்), ஹஜார் சீவூட் குவாங் (குவாங்), பாலாய் ராயா தாமான் செம்பாகா சாரி, வாசா 3 (செமெந்தா) மற்றும் பாலாய்ராயா ஜென்டராம் ஹீலிர்/ தாமான் டேசா பொது மண்டபம் (டெங்கில்)  ஆகிய இடங்களில் மலிவு விற்பனை நடைபெறும்.

அதனை தொடந்து, ஞாயிற்று கிழமை அன்று பாடாங் தாமான் கோசாஸ் கார் நிறுத்தும் வளாகம் ( லெம்பா ஜெயா), சூராவ் கைரியா, தாமான் மஸ்னா இரவு சந்தை வளாகம் (செந்தோசா), கிரின்வெல்லி , பண்டார் தாசிக் புத்ரி (குவாங்) மற்றும் போஸ் 1, தாமான் டேசா விஸ்தா பிபிஎஸ்டி (சுங்கை பிலேக்) ஆகிய இடங்களில் மலிவு விற்பனை நடைபெறும்.

சிலாங்கூர் விவசாய மேம்பாட்டு கழகத்தால் (PKPS) கிட்டத்தட்ட 3000 இடங்களில் இந்த மலிவு விற்பனை நடத்தப்பட்டுள்ளது. ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயனடைந்த இச்சந்தைக்குச் சிலாங்கூர் அரசு RM40 மில்லியன் மானியத்தைச் செலவிட்டுள்ளது.

இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் மாட்டிறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் பி கிரேட் முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5
கிலோ அரிசி 13.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

பொதுமக்கள் பி.கே.பி.எஸ் முகநூல் அல்லது http://linktr.ee/myPKPS என்ற இணைப்பின் மூலம் மலிவு விற்பனை நடைபெறும் இடங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.


Pengarang :