SELANGOR

சிலாங்கூரை ஒரு புதுமை படைப்பு தொழில் மையமாக உயர்த்த கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் ஏற்பாடு

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 11: சிலாங்கூரை ஒரு புதுமை படைப்பு தொழில் மையமாக உயர்த்தும் விருப்பத்திற்கு ஏற்ப கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளை மேற்கொள்ள ஒவ்வொரு ஆண்டும் பல ஒதுக்கீடுகள் வழங்குகிறது.

எம்பிஐ மற்றும் சுற்றுலா சிலாங்கூர் போன்ற நிறுவனங்களும் உள்ளூர் திறமைகளை முன்னிலை படுத்துவதுடன் இந்த முயற்சிக்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாக சுற்றுலா ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.

கைத்தொழில் மற்றும் புதுமை படைப்பு“Festival Reka Bentuk dan Kraf (Tukang) 2024 விழாவை சிலாங்கூர் நடத்தியது கலை மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் நிகழ்வுகளின் சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகும். இது போன்ற நிகழ்ச்சிகள் சுற்றுலாப் பயணிகளையும் கவரும்.

“எம்பிஐ மற்றும் சுற்றுலா சிலாங்கூர் ஆகியவை உள்ளூர் கலைஞர்களுக்கு எதிர்காலத்தில் கைவினைஞர் விழா போன்ற அவர்களின் திறமைகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய நிதி வழங்கத் தயாராக உள்ளன” என்று டத்தோ இங் சுவி லிம் கூறினார்.

இதற்கிடையில், பிபிடிகள் மூலம் படைப்புக் கலைகளில் உள்ளூர் கலைஞர்களின் திறமைகளை மேம்படுத்துவதற்கான திட்டத்தை விரிவுபடுத்துவதில் மாநில அரசு கவனம் செலுத்துகிறது என்று சுவி லிம் விளக்கினார்.

“திறமையான இளைஞர்கள் தங்கள் படைப்புகள் மற்றும் தயாரிப்புகளை விளம்பர நோக்கங்களுக்காக ஆய்வு செய்ய அவர்களின் பகுதியில் உள்ள சுற்றுலா குழு மூலம் பிபிடியை தொடர்பு கொள்ள அரசு ஊக்குவிக்கிறது.

“அதுமட்டுமில்லாமல், பல்வேறு உயர் கல்வி நிறுவனங்கள் (HEIs) கலைத்திறன்களை ஆதரிக்கின்றன. அதாவது “Dasein Academy of Arts“ மற்றும் “The One Academy“ ஆகியவை அவர்களின் பணியை முன்னிலைப்படுத்த ஒரு தளமாக இருக்கும்,” என்று அவர் கூறினார்.


Pengarang :