ANTARABANGSA

இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 37,718 பலி

அங்காரா, ஜூன் 27: காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 60 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்ட நிலையில் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 37,718 ஆக உயர்ந்துள்ளது என்று பிராந்தியத்தின் சுகாதார அமைச்சகம் கடந்த புதன்கிழமை தெரிவித்துள்ளது.

இதேவேளை, தாக்குதலில் மேலும் 86,377 பேர் காயமடைந்துள்ளதாக அனடோலு ஏஜென்சி தெரிவித்துள்ளது.

“கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய இராணுவம் நடத்திய தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 140 பேர் காயமடைந்தனர்.

இன்னும் பலர் இடிபாடுகளுக்கு அடியிலும், சாலையிலும் சிக்கிக் கொண்டுள்ளனர் காரணம் மீட்புக் குழுவினரால் அப்பகுதிக்கு செல்ல முடியாத சூழ்நிலையில் உள்ளனர் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

– பெர்னாமா-அனடோலு


Pengarang :