சிரம்பான், ஜூலை 16- இங்குள்ள கெமெஞ்சேவில் 6 ஆண்டுகளுக்கு முன்பு தனது சொந்த மகளுக்கு குழந்தை பிறக்கும் வரை பாலியல் பலாத்காரம் செய்ததாக சந்தேகிக்கப்படும் 52 வயது தந்தை நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினரிடமிருந்து புகார் கிடைத்ததைத் தொடர்ந்து இரவு 10.00 மணியளவில் அவ்வாடவர் கைது செய்யப்பட்டதாக தம்பின் மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்பரின்டெண்டன்ட் அமிருடின் சரிமான் கூறினார்.
இந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவம் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் கடந்த ஜூலை மாதம் வரை நடந்துள்ளது முதற்கட்ட விசாரணையின் வழி கண்டறியப்பட்டுள்ளது. வேலையில்லாமல் இருக்கும் பாதிக்கப்பட்ட பெண் தனக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயத்தில் இது குறித்து போலீசில் புகார் செய்யவில்லை என அவர் சொன்னார்.
இந்த தகாத உறவின் மூலம் 24 வயதுடைய அப்பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். அந்தப் பெண் குழந்தைக்கு தற்போது நான்கு வயதாகிறது. விசாரணைக்கு உதவுவதற்காக அந்த கைதான அந்நபர் நேற்று முதல் ஏழு நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 376 பி பிரிவின் கீழ் இந்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார் அவர்.