NATIONAL

தேசிய மாத தொடக்க நிகழ்வை முன்னிட்டு இலவசப் பேருந்து சேவை

கோலாலம்பூர், ஜூலை 21 – இன்று சைபர் ஜெயாவில் நடைபெறவிருக்கும் தேசிய மாத தொடக்கம் மற்றும் 2024 ஜாலுர் கெமிலாங்கை (தேசிய கொடி) பறக்கவிடும் இயக்கத்தின் தொடக்க நிகழ்வை முன்னிட்டு வருகையாளர்களுக்கு இலவசப் பேருந்து சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த இலவசப் பேருந்து சைபர் ஜெயாவிலுள்ள பார்க் ரைட் மற்றும் ரெக்காஸ்கேப் ஆகிய இரு இடங்களிலிருந்து பயணிகளை ஏற்றிச் சென்று நிகழ்வு நடைபெறும் இடமான சைபர் இவெண்ட் ஹாலில் இறக்கி விடும் என்று மலேசிய தகவல் இலாகா வெளியிட்டுள்ள விளக்கப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த இலவசப் பேருந்து சேவை காலை 8.00 மணி தொடங்கி மாலை 5.30 மணி வரை வாகன போக்குவரத்தைப் பொறுத்து 30 நிமிட இடைவெளியில் மேற்கொள்ளப்படும்.

சமூக விழா வடிவத்தில் நாட்டு மக்களிடையே நாட்டுப் பற்றை விதைக்கும் நோக்கிலான இந்நிகழ்வில் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Pengarang :