SELANGOR

ஞாயிறு அன்று மேலும் ஐந்து இடங்களில் மலிவு விற்பனை தொடரும்

ஷா ஆலம், ஆகஸ்ட் 9: அரிசி, முட்டை போன்ற பல்வேறு அடிப்படைப் பொருட்களை மலிவு விலையில் விற்கும் ஜுவாலான் எஹ்சான் ரஹ்மா திட்டம் எதிர்வரும் ஞாயிறு அன்று மேலும் ஐந்து இடங்களில் காலை 10 மணிக்குத் தொடரும்.

பாலாய்ராயா எம்பிகேகே பெரிகி நானாஸ், பூலாவ் இண்டா (பெலாபோஹான் கிள்ளான்), கெஆர்டி செயல்பாட்டு அறை & தாமான் டேசா இண்டா மேரு , குடியிருப்பாளர்கள் கழகம் (மேரு), கம்போங் சுவாங் ராசா பல்நோக்கு மண்டபம் (கோலா குபு பாரு), 99 ஸ்பிட்மார்ட் 1414, ஜாலான் தெம்பி சுங்கை அருகில் (பண்டார் பாரு கிள்ளான்) மற்றும் டாக்டர் ஜோர்ஜ் லிம் ஆ சோ மண்டபம் (ஶ்ரீ செர்டாங்) ஆகிய இடங்களில் மலிவு விற்பனை நடைபெறும்.

சிலாங்கூர் விவசாய மேம்பாட்டு கழகத்தால் (PKPS) கிட்டத்தட்ட 3000 இடங்களில் இந்த மலிவு விற்பனை நடத்தப்பட்டுள்ளது. ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயனடைந்த இச்சந்தைக்குச் சிலாங்கூர் அரசு RM40 மில்லியன் மானியத்தைச் செலவிட்டுள்ளது.

இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் மாட்டிறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் பி கிரேட் முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5
கிலோ அரிசி 13.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

பொதுமக்கள் பி.கே.பி.எஸ் முகநூல் அல்லது http://linktr.ee/myPKPS என்ற இணைப்பின் மூலம் மலிவு விற்பனை நடைபெறும் இடங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.


Pengarang :