ஷா ஆலம், ஆகஸ்ட் 15: நேற்று நடைபெற்ற சுக்மா பி பிரிவின் மகளிர் கால்பந்துப் போட்டியில் சிலாங்கூர் 6-0 என்ற கோல் கணக்கில் கூட்டரசு பிரதேச அணியை வீழ்த்தியது.
பெட்ரா ஜெயா, திடல் டியில் நடைபெற்ற இப்போட்டியில் அயூனா அஞ்சானி மூன்று கோல்களையும், நூரின் உமைரா, நூர் அண்ரினா மற்றும் நூர் அயின்சா ஆகியோர் தலா
ஒரு கோலையும் அடித்தனர்.
அதே பி குழுவில் இடம்பெற்றுள்ள பினாங்கு அணி, வெள்ளியன்று கூட்டரசு பிரதேச அணியையும், ஞாயிற்றுக்கிழமை சிலாங்கூர் அணியையும் களத்தில் சந்திக்க உள்ளது.