ஈப்போ, 30 ஏப்ரல்:
கெஅடிலான் கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி பேராக் மாநிலம் தனது தத்தெடுப்பு மாநிலமாக அறிவித்துள்ளது வரும் பொதுத் தேர்தலில் பேராக் மாநிலத்தை கைப்பற்றும் எண்ணத்தை காட்டுகிறது.
அவர் மேலும் தெரிவிக்கையில், கெஅடிலான் பேராக் மாநிலத்தை மக்களிடமே திருப்பி கொடுக்கும் என்றும் 2008-ற்கு பிறகு 11 மாதங்கள் இம்மாநிலத்தை ஆண்டதை நினைவு கூர்ந்தார்.
கெஅடிலான் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் தளவாடங்கள், அமைப்பு மற்றும் மன ரீதியாகவும் பலத்தை அதிகரித்து வெற்றி வாகை சூட வேண்டும்.
“பேராக் மாநிலத்தை நாம் கைப்பற்றி சாதனை படைத்துள்ளோம். 11 மாதங்கள் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து இருந்தோம். அம்னோ தேசிய முன்னணியை வீழ்த்த இது சரியான தருணம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் பேராக்கைமக்களிடமே திரும்பி ஒப்படைக்கலாம்,” என்று பேராக் மாநில பேராளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
கெஅடிலான் கட்சியின் அனைத்து இயந்திரங்களும் பாக்காத்தான் போட்டியிடும் எல்லா தொகுதிகளிலும் எந்நேரமும் தயாரான நிலையில் இருக்கும் படியும் நினைவுறித்தினார்.
மேலும் கூறுகையில், கட்சியின் தேர்தல் தொண்டுழியர்கள் நன்கு பயிற்சி பெற்று தேர்தல் பிரச்சார அறிக்கைகள் மக்களிடம் சென்றடைய வகை செய்யவேண்டும் என்றார்.