கோலாலம்பூர், 30 ஏப்ரல்:
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே 1 ஏற்பாடு செய்யப் பட்ட பேரணியை அனுமதிக்காது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
டாங் வாங்கி வட்டார காவல்துறை தலைவர் கூறுகையில் ஏற்பாட்டாளர்கள் பேரணி நடக்கும் இடத்தின் உரிமைஆயாளரின் ஒப்புதல் கடிதம் சமர்ப்பிக்க தவறிவிட்டதால் அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
” ஏற்பாட்டாளர்கள் கோலாலம்பூர் மாநகராட்சி மன்றத்தின் லோட் 10 மையத்தின் அனுமதி பெற தவறிவிட்டதால் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் காவல்துறை அனுமதி அளிக்கவில்லை”, என்று கூறினார்.
கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஏற்பாட்டாளர்களிடம் இருந்து விண்ணப்பக் கடிதம் பெற்றதாக உறுதிப்படுத்தினார்.
மேலும், ஏற்பாட்டாளர்களின் பிரதிநிதிகளை தான் சந்தித்து பேசி விட்டதாகவும் தெரிவித்தார்.