NATIONAL

49,000 அரசாங்க ஊழியர்கள் திவால் ஆகும் நிலையில் உள்ளனர்

ஷா ஆலம், 30 ஏப்ரல்: 49,000 மேற்பட்ட அரசாங்க ஊழியர்கள் திவால் ஆகும் சூழ்நிலையில் உள்ளார்கள் என்றும் இது வங்கி கடன் நிர்வாக தவறினால் என்று பொதுச் சேவை தொழிற்சங்கமான கியுபெக்ஸ் தலைவர், டத்தோ அஸி மூடா கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த  அரசாங்க ஊழியர்கள் தனிப்பட்ட வங்கி கடன் வசதியை வருமானத்திற்கு அதிகமாக பெற்றிருந்தால் ஆகும் என்றார்.

” இந்த நிலைமை மிக மோசமாக உள்ளது என்றும் குறிப்பாக அரசாங்க ஊழியர்கள் தங்களின் சம்பளத்தை திருத்தி , மாற்றி கடனுதவி பெறுகின்றனர்,”என்று கூறினார்.

” தற்போது  அரசாங்கம் 20 நிதி நிறுவனங்களுக்கு சம்பளத்தை தானாக செலுத்தும் அல்லது ” ஓதோ டெபிட்” மூலம் திரும்ப வசூல் செய்து கொண்டிருக்கிறாகள்,” என்று கூறினார்.

KUALA LUMPUR 15 DECEMBER 2016. Presiden Kongres Kesatuan Pekerja-pekerja di Dalam Perkhidmatan Awam Malaysia (CUEPACS), Datuk Azih Muda. NSTP/AZHAR RAMLI

 

 

 

 

 

 

ஆகவே, கியுபெக்ஸ்  அரசாங்கத்திடம் அங்காசா கூட்டுறவு சங்கம் மாதிரியான அரசாங்க ஊழியர்களின் கடன் பட்டியலில் பதிவு செய்ய வேண்டுகிறேன். இந்த நடவடிக்கை  அரசாங்க ஊழியர்கள் திவால் ஆவதில் இருந்து தடுக்கலாம் என்று தெரிவித்தார். இதுவரை 3000 மேற்பட்ட அரசாங்க ஊழியர்கள் திவால் ஆகிவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :