கோலா லம்பூர் , மார்ச் 6:
மக்களவை சபாநாயகர் டான்ஶ்ரீ பன்டிக்கார் அமீன் மூலியா எழுத்துப்பூர்மாக கேட்கப்பட்ட கேள்விகளை அனுமதிக்காத காரணத்தை விளக்க வேண்டும் என்று புக்கிட் காட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ஷாம்சுல் இஸ்கண்டர் முகமன் அகீன் தெரிவித்தார். பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் ரசாக் மற்றும் அம்னோ வழக்கறிஞர் டான்ஶ்ரீ முகமட் ஷாபி அப்துல்லா சம்பந்தப்பட்ட காவல்துறையின் ரிம 9.2 மில்லியன் ஊழல் விசாரணை அறிக்கை தொடர்பில் கேள்விகளை எந்த காரணமும் இன்றி சபாநாயகர் தள்ளுபடி செய்தார்.
இதற்கு முன்பு, மக்களவையில் பிரதமர் நிர்வாகம் மீதான அவதூறு கேள்விகள் என்று சபாநாயகர் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் ஷாம்சுல் மக்களவை கூட்ட விதிமுறைகளை மேற்கோள் காட்டி அவரிடம் விளக்கம் கோரினார்.
#தமிழ் அரசன்