NATIONAL

அஸ்மின்: ” ஒரிரு தொகுதிகள் மட்டுமே முடிவு செய்யப் படாமல் இருக்கிறது”

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 7:

பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி கட்சிகளின் சிலாங்கூர் மாநில சட்ட மன்ற தொகுதிகளின் பங்கீடு வெகு விரைவில் முடிவு செய்யப்படும் என்று சிலாங்கூர் மாநில பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். ஓரிரு நாட்களில் தொகுதி பங்கீடுகள் முடிவுக்கு வரும் என்று உறுதியாக கூறினார்.

”  ஓரிரு தொகுதிகள் மட்டும் இன்னும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடந்து வருகிறது. ஓரிரு நாட்களில் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு தொகுதி பங்கீடுகள் முடிவு அடைந்து விடும்,” என்று கெஅடிலான் கட்சியின் உச்ச மன்றக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.


Pengarang :