SELANGOR

சிலாங்கூர் மந்திரி பெசாரின் சித்திரை, விஷூ & வைசாக்கி புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

சித்திரப்புத்தாண்டு,
விஷூ புத்தாண்டு மற்றும் ஜட்டா ஹய் வைசாக்கி புத்தாண்டுகளை கொண்டாடும் சிலாங்கூர் வாழ் மற்றும் நாட்டின் அனைத்து இந்து,மலையாளி மற்றும் சீக்கியர்களுக்கு இவ்வேளையில் புத்தாண்டு வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.

சித்திரை இந்துக்களுக்கும் விஷூ மலையாளிகளுக்கும் வைசாக்கி சீக்கியர்களுக்கும் புத்தாண்டாக விளங்கிடும் நிலையில் சகோதரத்துவத்துடன் இப்புத்தாண்டை அனைவரும் கொண்டாடி மகிழ வேண்டுகிறேன்.

இன்றைய சூழலில் நம் நாடு பெரும் அலைகளுக்கு மத்தியில் பயணம் செய்ய கப்பல் போல் நகர்ந்துக் கொண்டிருக்கிறது.அடுத்து வரும் மாதம் அனைவருக்கும் சவால் மிக்கதாய் அமைந்துள்ளது.

இருப்பினும்,இச்சவால்களை நாம் வெற்றிகரமாக கடந்து செல்ல வேண்டும்.புதிய ஆண்டு புதய நம்பிக்கையை உருவாக்கட்டும்.மலேசியர்கள் புதிய ஒன்றை உருவாக்க தயாராக வேண்டும்.மலேசியர்கள் புதியதை வரவேற்க தயாராக இருக்க வேண்டும்.நாம் அமைதியையும் சுபிட்சத்தையுக் நிலைக்கொள்ள இன்னும் ஒரு மாதத்தில் புதிய ஒன்றை வரவேற்று சகோதரத்துவத்தோடு உயிர்க்கொள்ள வழி செய்வோம் வாரீர்.

பெரும் நம்பிக்கையோடு நமது இலக்கை இந்த புத்தாண்டில் வெற்றிக் கொள்வோம்.புத்தாண்டை கொண்டாடும் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி
சிலாங்கூர் மாநில மந்திரி பெசார்

 


Pengarang :