கோலா லங்காட், ஏப்ரல் 20:
சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி தாம் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டுகளில் உண்மை இருந்தால் தமது பதவியை ராஜினாமா செய்து விடுவேன் என்று சூளுரைத்தார். ஏதாவது சந்தேகம் இருந்தால் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் (எஸ்பிஆர்எம்) புகார் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
” நான் எந்த ஒரு அதிகாரிகளிடமும் குத்தகை, நிலம் மற்றும் டெண்டர் வேண்டும் என்று கேட்டதில்லை. அப்படி இருந்தால், புகார் செய்யுங்கள். எனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்கிறேன்,” என்று கூறினார்.
சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கோலா லங்காட் மாவட்ட மன்றத்தின் புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுது இவ்வாறு கூறினார்.