SELANGOR

சுஹாய்மி தன் கடமையை நிறைவாக செய்வார் – மக்கள் நம்பிக்கை!!

கிள்ளான்,ஏப்30:

சுங்கை கண்டிஸ் தொகுதிக்கு வேட்பாளர் சுஹாய்மி ஷாஃபி அவருக்கு வழங்கப்படும் கடமையை நிறைவாக செய்யும் ஆற்றலையும் திறனை கொண்டிருப்பதாக ஸ்ரீ அண்டலாஸ் பகுதி மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

சுஹாய்மி ஷாஃபி சிறந்த வேட்பாளர்.அவரால் இத்தொகுதியில் நன் மாற்றங்களை கொண்டு வர முடியும் என்றும் கூறிய இத்தொகுதி வாக்காளர் சத்திய கணேசன் (47) இங்குள்ள உட்கட்டமைப்பு பிரச்னைக்கும் அவர் தீர்வு காண்பார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது உட்கட்டமைப்பு பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் என சுஹாய்மி கூறியதை நினைவுக்கூர்ந்த சத்தியா கணேசன் அவர் சொன்னது போல் இங்குள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண்பார் என்றும் கூறினார்.

அவரது அணுகுமுறையும் செயல்பாடுகளும் பிரச்சார வியூகம் மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

அதேவேளையில்,சுஹாய்மி இத்தொகுதி மக்களின் நலனின் பெரும் கவனம் செலுத்துவார் என்றும் இத்தொகுதியை சிறந்த மேம்பாட்டிற்கு இட்டுச் செல்வார் என்றும் இப்ராஹிம் அபு பக்கர் (77) நம்பிக்கையோடு கூறினார்.

மேலும்,மக்களின் பிரச்னைகள் கேட்டறியப்பட்டு அவற்றுக்கு தீர்வு காணப்படுவதோடு அவர்களுக்கான உதவிகளும் திட்டங்களும் தொடர்ந்து மெய்பிக்கப்படும் எனும் நம்பிக்கையை சுஹாய்மி உயிர்ப்பித்துள்ளார் என்றும் அபு பக்கர் கூறினார்.

இதற்கு முன்னர் சட்டமன்ற உறுப்பினராக சுஹாய்மி இருந்துள்ளதால் அவர் மக்களுக்கான பணிகளை நிறைவாகவே செய்துள்ளார் என்பதை இங்குள்ள மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர் என்பது நடப்பில் அறியப்படும் உண்மையாகும்.


Pengarang :