சுங்கை பூலோ,மே02:
நாட்டின் 14வது பொதுத் தேர்தலில் ஹராப்பான் கூட்டணி வென்றால் ஊடகங்கள் சுதந்திரமாகவும் எவ்வித தடைகளுமின்றி செயல்படும் என ஆர்.சிவராசா கூறினார்.
ஊடக ஜனநாயகத்தை பறிக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் ஹராப்பான் கூட்டணி முறியடிக்கும் என்றும் சுங்கை பூலோ வேட்பாளரான சிவராசா கூறினார்.
அதுபோலவே,அச்சு மற்றும் ஊடக துறை சுதந்திரமாக செயல்பட வழிகோலுவதோடு அதற்கான சுதந்திரத்தை நாங்கள் வழங்குவோம் என்றார்.நாட்டில் ஊடகத்துறை சிறந்த நிலையில் செயல்படுவதை நாங்கள் உறுதி செய்வோம் என்றார்.
நாங்கள் ஊடகத்துறைக்கு எந்தவொரு அழுத்தமும் கொடுக்க மாட்டோம்.நாட்டின் ஊடகத்துறையின் தனித்துவம் காக்கப்படும் என்றும் சிவராசா நம்பிக்கைத் தெரிவித்தார்.