NATIONAL

முஹிடின்: அன்வார் மலேசியாவை மறுசீரமைக்க மகாதீருக்கு உறுதுணையாக இருப்பார்

பெட்டாலிங் ஜெயா, மே 17:

பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் மூத்த ஆலோசகர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிமின் விடுதலை, பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் அவர்களின் மலேசிய அரசாங்க நிர்வாகத்தில் மறுமலர்ச்சி ஏற்படுத்த உறுதுணையாக இருப்பார் என்று உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் டான்ஸ்ரீ முஹிடின் யாசீன் கூறினார். முன்னாள் துணைப் பிரதமருமான அன்வாரின் நிர்வாகத் திறமை மற்றும் அனுபவம் நாட்டின் தலைமைத்துவத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதில் ஐயமில்லை என்றார்.

 

 

 

 

 

 

 

 

 

 

”  அன்வாரின் மறு பிரவேசம் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் அவர்களின் புதிய மலேசியாவை உருவாக்கும் முயற்சிக்கு உந்துதல் ஏற்பட்டு உள்ளது. பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் அனைத்து தலைவர்களின் ஒத்துழைப்போடு ஒரு தலைசிறந்த மலேசிய நாட்டை உருவாக்க முடியும்,” என்று பாடாங் தீமோரில் நடைபெற்ற மெர்டேக்கா ராக்யாட் மக்கள் பேரணியில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்தார்.


Pengarang :