NATIONAL

நஜிப் வீட்டில் 284 பெட்டிகளும் 72 பைகளில் தங்கநகைகளும் பறிமுதல் !!

ஷா ஆலாம்,மே18:

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் வீட்டில் 284 பெட்டிகளில் ஆடம்பர கைபைகளும் 72 பைகளில் தங்கநகைகளையும் ரொக்கப்பணத்தையும் போலீஸ் கைப்பற்றியதாக தெரிவிக்கப்பட்டது.

கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தும் 1எம்டிபி விவகாரத்தில் தொடர்புடையது எனவும் நம்பப்படுகிறது.

நேற்றிரவு தொடங்கி டத்தோஶ்ரீ நஜிப்பின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட இந்த அதிரடிச் சோதனையில் கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பை நிர்ணயிக்க முடியவில்லை என புக்கிட் அமான் வர்த்தக குற்றப்புலனாய்வு  பிரிவு இயக்குனர் டத்தோ அமார் சிங் இஸ்ஹார் சிங் கூறினார்.

கைப்பற்றப்பட்ட பொருட்களின் மீது நுண்ணியமான விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் கூறிய போலிஸ் தரப்பு அதன் பின்னர் கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பினை குறிப்பிடும் என்றார்.

போலீஸ் மேற்கொண்ட விசாரணையின் போது அவ்வீட்டில் யாரும் இல்லை என்றும் அவ்வீட்டிலிருந்து பொருட்களை எடுத்து செல்ல 5 லாரிகள் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.


Pengarang :