NATIONAL

பிரதமர்: ஜோ லோவின் குற்றச்சாட்டு அடிப்படையற்றது !!!

செர்டாங், ஆகஸ்ட் 12:

பிரபலமான சர்ச்சைக்குரிய தொழில் அதிபர் லாவ் தேக் ஜோ அல்லது ஜோ லோ சொகுசு கப்பல் இகுவானிமிட்டி சம்பந்தமாக அமெரிக்க நீதித்துறையுடன் தன்னை தொடர்பு படுத்துவதை பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் மறுத்தார். இந்த தகவலில் உண்மையில்லை என்றும் அப்படி இருந்தால் தான் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பை விட பலம் பொருந்தியவர் என்று நாசூக்காக கூறினார்.

”  அப்படி என்றால் அமெரிக்க அரசாங்கத்தின் சார்பில் பேசுவதை நான் பெருமை கொள்கிறேன். ஜோ லோ அமெரிக்க நீதித்துறையுடன் தொடர்பு கொள்ள வேண்டும்,” என்று செய்தியாளர்களிடம் துன் டாக்டர் மகாதீர் முகமட் இவ்வாறு பேசினார்.


Pengarang :