SELANGOR

மந்திரி பெசார்: பிஎன் ஆட்சி காலத்தில் சிலாங்கூர் மக்களின் நலன்களை கருத்தில் கொள்ளவில்லை !!!

பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் 8:

தேசிய முன்னணி அரசாங்கத்தினர் சிலாங்கூர் மாநிலத்தை வழி நடத்தும் போது  மக்கள் நலத்தில்  கொஞ்சமும் அக்கறை கொண்டதே இல்லை என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி கூறினார். தேசிய முன்னணியினர் மக்கள் நலத்திட்டங்கள் எதுவும் செய்யவில்லை. ஆனால் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் அரசாங்கம் பொருளாதார வளர்ச்சி திட்டங்களை செவ்வனே செயல் படுத்தி வருகிறது என்றார்.

 

 

 

 

 

” சிலாங்கூர் மாநிலத்தில் ஒன்றுமே செய்யத் தேவையில்லை என்று பறை சாற்றி வருகின்றனர். எல்லா மேம்பாடுகளையும் ஏற்கனவே செய்து விட்டதாக கூறி இருக்கிறார்கள். நாம் தேசிய முன்னணியினர் ஒன்றுமே செய்யவில்லை என்று சொல்லவில்லை. ஆனால், மாநில மக்கள் அதன் வளங்களை அனுபவிக்க இல்லை,” என்று ஸ்ரீ செத்தியா இடைத்தேர்தலில் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் வேட்பாளர் ஹாலிமி அபு பாக்காரை ஆதரித்து இறுதி பிரச்சாரக் கூட்டத்தில் இவ்வாறு அமிரூடின் பேசினார்.


Pengarang :