NATIONAL

வெ. 5 லட்சம் பெறுமானமுள்ள போலி பொருட்கள் பறிமுதல்

கோலாலம்பூர், ஜன.28:

உள்நாட்டு வாணிப மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சு மேற்கொண்ட அதிரடி சோதனையில் பல்வேறு முத்திரைகள் கொண்ட 5,295 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தலைநகரில் போலி பொருள் விற்பனைக்கு எதிராக புடு, ஜாலான் குளுகோரில் உள்ள ஒரு பேரங்காடியின் 3 கிடங்குகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் இப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக கோலாலம்பூர் உள்நாட்டு வாணிப மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சின் அமலாக்க பிரிவு தலைமை அதிகாரி லோ சுவீ ஹோன் தெரிவித்தார்.

“ கடந்த ஒரு மாதமாக அமைச்சு மேற்கொண்ட உளவு நடவடிக்கை மற்றும் வர்த்தக முத்திரை பதிவு உரிமையாளரின் ஒத்துழைப்பு ஆகியவற்றின் பலனாக இந்தப் பொருட்களை நாங்கள் கைப்பற்றினோம் “ என்று தலைநகரில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் பேசினார்.


Pengarang :