கோலாலம்பூர், பிப்.21:
அகால்புடி அறவாரியத்துக்குச் சொந்தமான பல மில்லியன் வெள்ளி தொடர்பில் அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஜாஹிட் மீது சுமத்தப்பட்ட 47 வழக்குகளை உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற அனுமதி வழங்கப்பட்டது.
தம்மீது சுமத்தப்பட்ட வழக்கை செஷன்ஸ் நீதிமன்றத்தில் இருந்து உய்ர்நீத்மன்றத்திற்கு மாற்றக் கோரி தமது வழக்கறிஞர் ஹிஷாம் தே போ தெக் மூலம் அகமது ஜாஹிட் ( வயது 65) செய்த மனுவை உயர்நீதிமன்ற நீதிபதி முகமது ஜைனி மஸ்லான் இன்று அனுமதித்தார்.
முன்னதாக, ஜாஹிட் செய்த மனுவிற்கு அரசு தரப்பு வழக்கறிஞரும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய வழக்கறிஞர் அகமது சஸ்லீயும் எதிர்க்கவில்லை என்று ஹிஷாம் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 19, டிசம்பர் 14 மற்றும் இவ்வாண்டு பிப்ரவரி 20 ஆகிய தேதிகளில் தம்மீது சுமத்தப்பட்ட 47 குற்றச்சாட்டுகளை மறுத்து ஜாஹிட் விசாரணை கோரினார். அவற்றுள் 12 குற்றச்சாட்டுகள் நம்பிக்கை மோசடி குற்றத்திற்காகவும் மேலும் 27 குற்றச்சாட்டுகள் பணச் சலவைக் குற்றம் புரிந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளன.