கோலா லம்பூர், ஆகஸ்ட் 24:
மலேசியத் திருநாட்டின் வாழ்ந்து வரும் ஒவ்வொரு சமூகத்தினரும் தங்களின் பங்களிப்பை வழங்கி வந்துள்ளனர் என்றும் அதை பற்றி கேள்வி எழுப்புவது தேவையில்லாத ஒன்று என உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ முஹீடின் யாசீன் தெரிவித்தார். மாறாக ஒவ்வொருவரும் மற்றவர்களுடன் சார்ந்தே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
முஹீடின், அரசு சாரா இயக்கங்கள் சேர்ந்து ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் உரையாற்றும் போது இவ்வாறு கூறினார்.