NATIONAL

கடனை மீட்டெடுக்க இபிஎப் மற்றும் வருமான வரித்துறை உடன் உடன்படிக்கை- பிடிபிடிஎன்

கோலா லம்பூர், ஆகஸ்ட் 29:

தேசிய உயர்க் கல்வி கடன் நிறுவனத்திடம் (பிடிபிடிஎன்) கடன் பெற்று கடனைத் திருப்பி அடைக்காதவர்கள் மீது நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று, பிடிபிடிஎன் பல அரசு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் தெரிவித்தார்.

எனவே எங்கள் இலக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு பட்டம் பெற்று இன்னும் கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள். அவர்கள் இன்னும் கடனைத் திருப்பிச் செலுத்த இயலாமல் இருக்கிறது என்பது ஏற்க கூடியதில்லை.” என்று அவர் தெரிவித்தார்.

தொழிலாளர் சேமநல நிதி வாரியம் (இபிஎப்) மற்றும் உள்நாட்டு வருமான வரித்துறை (எல்எச்டிஎன்) ஆகியவை தற்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள அரசாங்க நிறுவனங்கள் என்று மஸ்லீ கூறினார்.

கடந்த 1999-ஆம் ஆண்டிலிருந்து 2019-ஆம் ஆண்டு ஜூலை வரையிலும் சுமார் 902,881 மாணவர்களுக்கு 1.33 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள கடனை பிடிபிடிஎன் வழங்கியுள்ளது.


Pengarang :