NATIONAL

தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத்தேர்தல் தேதியை எஸ்பிஆர் இன்று அறிவிக்கும்

கோலாலம்பூர், அக்.1-

ஜோகூர், தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் தேதியை தேர்தல் ஆணையம் ( எஸ்பி ஆர்) செவ்வாய்க்கிழமை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புத்ராஜெயாவில் உள்ள மெனாரா எஸ்பிஆரில் நடைபெறும் செய்தியாளர் கூட்டத்தில் இத்தேதி அறிவிக்கும்.
கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி இத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோ டாக்டர் முகமது ஃபாரிட் முகமது ரஃபிக் மாரடைப்பினால் காலமானடைந்ததைத் தொடர்ந்து இங்கு இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது.
பக்காத்தான் கூட்டணி பெர்சத்து கட்சியைச் சேர்ந்த டாக்டர் ஃபாரிட், பிரதமர் துறை துணை அமைச்சராகவும் பதவி வகித்தார் .


Pengarang :