SELANGOR

வெள்ள அபாயம்: எஸ்பிஎம் தேர்வு எழுதும் மாணவர்கள் மீது கவனம் செலுத்தப்படும்

கோலசிலாங்கூர், அக்.29-

எதிர்வரும் திங்கள்கிழமை தொடங்கவிருக்கும் எஸ்பிஎம் தேர்வு எழுதும் மாணவர்கள் வெள்ளப் பேரிடரை எதிர்நோக்கும் சாத்தியம் இருப்பதால், அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவது குறித்து சிலாங்கூர் மாநில பேரிடர் நிர்வாகப் பிரிவு திட்டமிடுகிறது.

தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுபதற்கு முன்னர் இப்பேரிடரால் பாதிப்புக்குள்ளாகும் மாணவர்கள் அடையாளம் காணப்படுவர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்தார். அடுத்த திங்கள்கிழமை எஸ்பி எம் தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களை அடையாளம் கண்டு வருகிறோம்.

அவர்களுக்கு உதவி தேவைப்பட்டால், அதை நிறைவேற்றுவதற்கு தயாராகி வருகிறோம் என்றார் அவர். பாரிட் மஹாங் தேசிய பள்ளியில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் மந்திரி பெசார் மேற்கண்டவாறு பேசினார்.


Pengarang :