ஷா ஆலம், நவ.20-
2022 உலக கிண்ண தகுதி சுற்றின் இரண்டாவது ஆட்டத்தில் கருடா குழுவை ஹரிமாவ் மலாயா குழு வீழ்த்தியதை மந்திரி பெசார் அமிருடின் ஷாரி பாராட்டினார்.
மலேசிய ஆட்டக்காரர்கள் மிகுந்த நெறியோடு கட்டொழுங்காகவும் தொடர்ந்து பதில் தாக்குதல் நடத்தி ஆட்டத்தை விறுவிறுப்பாக்கினர் என்றார் அவர்.
“சாபாவி ரஷிட் அடித்த ஃபிரி கிக் அபாரமானது…ஹரிமாவ் மலாயா குழுவிற்கு ஒரு சபாஷ்..இந்தோனேசியாவை 2-0 என்ற கோல் எண்ணிக்கை வீழ்த்தினர்” என்றும் அவர் தமது டூவிட்டரில் தெரிவித்தார்.
இதுவரை ஐந்து ஆட்டங்களை ஆடியுள்ள மலேசியாவிற்கு இவ்வெற்றி மூலம் மேலும் மூன்று புள்ளிகள் கிட்டியுள்ளன.