கோலாலம்பூர், நவ.21-
மலேசிய தயாரிப்புகளை வாங்குவோம் இயக்கம் நல்ல பயனை அளிக்கத் தொடங்கியுள்ளதோடு உள்நாட்டு பயனீட்டாளர்கள் மத்தியில் உள்நாட்டு தயாரிப்பு மீதான் நம்பிக்கையை அதிகரித்துள்ளதாக உள்நாட்டு வர்த்தக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சு தெரிவித்தது.
அமைச்சு ஏற்பாடு செய்த உள்நாட்டு நிறுவனங்கள் பங்கேற்ற சந்தை விழாக்கள் வெற்றி பெற்றதன் மூலம் இது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சின் வர்த்தக மேம்பாட்டு பிரிவு இயக்குநர் இஸ்மைநுர் ஹாடி அமாட் பாகெரோன் கூறினார்.
இந்த இயக்கம் மற்றும் அமைச்சின் மூலம் மாநில அரசாங்கம் ஏற்பாடு செய்த சந்தைகளுக்கு பல தரப்பட்ட மக்கள் நல்ல ஆதரவு வழங்கி வருகின்றனர் என்றார் அவர்.
இந்த சந்தை அடுத்த ஆண்டிலும் தொடரப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளையும் அமைச்சு பெற்றுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.