SELANGOR

டாருல் ஏசான் இலவச குடிநீர் திட்டம் பதிவதற்கான இறுதி நாள் டிசம்பர் 31

கோலாலம்பூர், டிச.24-

டாருல் ஏசான் தண்ணீர் திட்டத்திற்கான பதிவு டிசம்பர் 31ஆம் தேதி முடிவுறுவதை முன்னிட்டு இதில் இன்னும் பதிந்து கொள்ளாத சிலாங்கூர் மாநில மக்களை ஊக்குவிக்கும் இயக்கம் ஒன்று ஆயர் சிலான்கூர் நிர்வாகம் முடுக்கியுள்ளது.
இலவச குடிநீர் திட்டத்தில் பதிந்து கொள்ளுமாறு அச்சு ஊடகம், மின்னியல் ஊடகம், ஃபேஸ்புக், இந்ஸ்தாகிராம், டுவீட்டர் போன்ற சமூக ஊடகங்கள் போன்றவற்றின் மக்களுக்கு நினைவுறுத்தப்படுவதாக அந்நிறுவனத்தின் தொடர்பு பிரிவுத் தலைவர் அப்துல் ஹாலிம் மாட் சோம் கூறினார்.

“சமூக சேவை மையம் மற்றும் ஆயர் சிலாங்கூர் ஆகியவற்றின் ஒத்துழைப்போடு மாநில அரசு இத்திட்டம் குறித்த விளக்கமளிப்பு விரிவாக மேற்கொள்ளப்படுவதாக” அவர் சொன்னார்.
அதேவேளையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் சமூகப் பிரதிநிதிகள் மூலம் மாநில மக்களுக்கு விளக்கமளிப்பு கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன என்று சிலாங்கூர்கினியிடம் அவர் தெரிவித்தார்.
இதுவரையில், இது போன்று 1,476 விளக்கமளிப்பு கூட்டங்கள் 9 மாவட்டங்களில் நடத்தப்பட்டுள்ளன என்றும் அவர் சொன்னார்.


Pengarang :