ஷா ஆலம், ஜன.6-
ஷா ஆலம் மாநகராட்சி மன்ற (எம்பிஎஸ்ஏ) பகுதியில் கேடிஇபி நிறுவனம் மேற்கொள்ளும் திடக்கழிவு நிர்வாகம் சீராக நடைபெறுகிறது. ஜனவரி முதல் தேதி தொடங்கி கடந்த ஐந்து நாட்களாக தங்கள் நிறுவனம் புதிததாக மேற்கொண்டு வரும் துப்புரவு பணிகளை கண்காணித்ததிலும் கிடைக்கப்பெற்ற புகார்களைக் கொண்டும் இந்த நிலை கண்டறியப்பட்டதாக கேடிஇபி நிர்வாக இயக்குநர் ரம்லி முகமது தாஹிர் கூறினார்.
நாள் ஒன்றுக்கு சுமார் 650 டன் திடக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன என்றார் அவர்.
இதுவரை அனைத்தும் சீராக நடைபெற்று வருகின்றன. முந்தைய காலத்தில் தேங்கிய கழிவுகளும் அகற்றப்பட்டு வருகின்றன என்றும் அவர் சொன்னார்.
அனைத்து வழி மற்றும் சாலைகளையும் பழக்கப்படுத்திக் கொண்டும் வரும் வேளையில் அட்டவணைக்கும் ஏற்ற வகையில் செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.