SELANGOR

கிள்ளான் துறைமுகத்திற்கு செல்லும் 49 சாலைகள் சீரமைக்கப்படுகின்றன!

ஷா ஆலம், மார்ச் 17-

கிள்ளான் துறைமுகத்திற்கு செல்லும் 49 சாலைகள் நேற்றிரவு தொடங்கி சீரமைக்கப்படுகின்றன என்று கிள்ளான் துறைமுக சட்டமன்ற உறுப்பினர் அஸ்மிசான் ஜாமான் ஹுரி கூறினார்.
இந்த சீரமைப்பு பணி முழுமையாக நிறைவடைவதற்கு 6 மாத காலம் தேவைப்படும் எனக் கணிக்கப்படுவதாக அவர் சொன்னார்.

இந்தப் பராமரிப்பு கால கட்டத்தில் சம்பந்தப்பட்ட சாலைகளைப் பயன்படுத்துவோர் அங்குள்ள அறிக்கை பலகைகளில் காணப்படும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என்றார் அவர். கூட்டரசு அரசாங்கம் வழங்கிய ஒதுக்கீட்டு நிதியைக் கொண்டு மேற்கொள்ளப்படும் இச்சீரமைப்பு பணிகள் பயனீட்டாளர்களுக்கு நன்மை அளிக்கும் என நம்பப்படுகிறது என்றார்.

ஜாலான் பெலாபுரான் உத்தாரா- பாராட், பூலான் இண்டா நெடுஞ்சாலை, ஜாலான் பிந்தாசான், வட கிள்ளான் சாலை, பத்து உஞ்சுர் ஆகிய சாலைகள் பராமரிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ள சாலைகளில் அடங்கும்.


Pengarang :