SELANGOR

ஜெராம் சட்டமன்ற தொகுதி மக்களுக்கு அன்றாடத் தேவை பொருட்கள் அடங்கிய 500 கூடைகள்

ஷா ஆலம், மார்ச் 27-

கோவிட் 19 பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள நடமாட்ட கட்டுப்பாடு காரணமாக சில சவால்களை எதிர்நோக்கியுள்ள ஜெராம் சட்டமன்ற தொகுதியில் உள்ளவர்களுக்கு அன்றாட தேவைகளுக்கான பொருட்கள் அடங்கிய 500 பொருட் கூடைகள் விநியோகிக்கப் பட்டுள்ளதாக அதன் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் முகமது ஷாய்ட் ரோஸ்லி கூறினார்.

சட்டமன்ற தொகுதிகளுக்கு சிலாங்கூர் மாநில அரசு ஒதுக்கீடு செய்த நிதியைக் கொண்டு ஏப்ரல் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு காலத்தில் இந்த உதவி நல்கப்பட்டதாக அவர் வருமானத்திற்கான மூலதனத்தை இழந்துள்ள மக்களின் மீது பரிவு கொண்டு இந்த ஒதுக்கீட்டை திட்டமிட்ட மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரிக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இந்த உதவித் திட்டத்திற்காக ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மாநில அரசு தலா ரிம 30 ஆயிரம் ஒதுக்கிடு செய்துள்ளது என்றார் அவர்.


Pengarang :