புத்ராஜெயா, ஏப்ரல் 9:
நடமாடும் கட்டுப்பாட்டு ஆணையின் (பிகேபி) போது ஏற்படுத்தப்படும் சாலைத் தடுப்புகளில் சாலைப் போக்குவரத்துத் துறை (ஜேபிஜே) காவல் துறைக்கு உதவுவதற்குத் தயாராக இருப்பதாக தற்காப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். ஜேபிஜே அதற்கு விண்ணப்பித்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
பிகேபி நடவடிக்கை அமல்படுத்தப்பட்ட நேரத்தில், சரியான ஓட்டுநர் உரிமம் அல்லது சாலை வரி இல்லாத ஓட்டுநர்கள் காவல் துறை நடவடிக்கையிலிருந்து விலக்கப்பட்டனர். இருப்பினும், அவர்கள் சரியான ஆவணங்களை கொண்டிருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.