Farit Ismeth Emir. Foto Facebook RTM
NATIONAL

ஆர்டிஎம் செய்தி வாசிப்பாளர் பாரித் இஸ்மெத் எமிர் இன்று காலமானார்

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 20:

பிரபல மலேசிய வானொலி தொலைக்காட்சி (ஆர்.டி.எம்) செய்தி தொகுப்பாளர் பாரித் இஸ்மெத் எமிர் சிலாங்கூரின் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள அசுந்தா மருத்துவமனையில் இன்று காலை 11.10 மணியளவில் காலமானார்.

ஏழு பிள்ளகளுக்கு தந்தையான 66 வயது பாரித் இஸ்மெத் எமிர், அரசு நடத்தும் பொது ஒளிபரப்பு நிலையத்தில் மூத்த செய்தி தொகுப்பாளராக இருந்தார்.

ஒரு ‘மதிப்புமிக்க ரத்தினத்தை’ இழந்துவிட்டதாக ஆர்.டி.எம் அறிவித்தது.

“நாங்கள் இன்று ஒரு ரத்தினத்தை இழந்துவிட்டோம் என்று அறிவிப்பதில் வருத்தமாக இருக்கிறது. ஆர்.டி.எம் செய்தி தொகுப்பாளரான பாரித் இஸ்மெத் எமிர் அல்லது ஆர்.டி.எம் ஊழியர்களிடையே பாக் ஙா என அழைக்கப்பட்டவர் இன்று காலை தன் கடைசி மூச்சை விட்டுள்ளார்”.

“அவரின் குடும்பத்திற்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்” என்று ஆர்.டி.எம். சமூக ஊடகங்களில் ஒரு பதிவில் எழுதியுள்ளது.


Pengarang :