SERDANG, 23 April — Robot penghantaran makanan kepada para pesakit ketika Lawatan Pengoperasian Pusat Kuarantin dan Rawatan COVID-19 di MAEPS hari ini. –fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA
NATIONALSELANGOR

செர்டாங் விவசாய கண்காட்சி பூங்கா தனிமைப்படுத்தும் மையத்தில் 12 கோவிட் நோயாளிகள் அனுமதி

செர்டாங், ஏப். 23-

இங்குள்ள செர்டாங் மலேசிய விவசாய கண்காட்சி பூங்கா (மேப்ஸ்) தனிமைப்படுத்தும் மையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் எவ்வித அறிகுறியும் கொண்டிராத 12 கோவிட் 19- நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர்.
கிள்ளான் பள்ளத்தாக்கு சுற்றுப் பகுதிகளில் உள்ள கோவிட் – 19 மருத்துவமனைகளின் நோயாளிகள் தொடர்பில் பெறப்படும் தகவல்கள் அடிப்படையில் இந்நோயாளிகள் எண்ணிக்கை அமைந்திருப்பதாக இதன் இயக்குநர் டாக்டர் முகமது அனுவார் அப்துல் சாமாட் @மாமுட் தெரிவித்தார்.

நெகிரி செம்பிலானில், சிரம்பான் மற்றும் ரெம்பாவ் போன்ற மருத்துவமனைகளில் இருந்தும் தாங்கள் கருத்துகளைப் பெற்றதாக அவர் சொன்னார்.
கோவிட் – 19 அறிகுறிகளைக் கொண்ட மற்றும் குறைந்த அறிகுறிகளைக் கொண்டவர்களை இந்த மையத்தில் அனுமதிப்பது குறித்தும் கருத்துகள் பெறப்பட்டதாக அவர் சொன்னார்.
சுங்கை பூலோ மருத்துவமனையைச் சேர்ந்த நோயாளிகளும் இந்த மருத்துவமனையில் சேர்க்கப்படலாம் என்றார் முகமது அனுவார்.


Pengarang :