Sekatan jalan dilakukan anggota polis di Seksyen 24, Shah Alam pada 16 April 2020 ekoran pelaksanaan Perintah Kawalan Pergerakan. Foto ASRI SAPFIE/SELANGORKINI
NATIONAL

திங்கட்கிழமை தொடங்கி சாலைத் தடுப்புகள் குறைக்கப்படும்- காவல்துறை

கோலா லம்பூர், மே 2:

எதிர் வரும் திங்கட்கிழமை தொடங்கி சாலைத் தடுப்புகளை மலேசிய காவல் துறை குறைக்கும் என்றும், மேலும் சமூக  இடைவெளியை அமல்படுத்துவதில் கவனம் செலுத்துவதோடு, சட்டவிரோதமாக குடியேறுபவர்களின் நுழைவு மற்றும் கடத்தல் நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்தும் என்று காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்தார். நேற்று அரசாங்கத்தின் நிபந்தனைக்கு உட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு (பிகேபிபி) ஏற்ப  உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

“இந்த அரசாங்கத்தின் சமீபத்திய உத்தரவுக்கு இணங்க, காவல் துறை மற்றும் மலேசிய ஆயுதப்படைகள் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அழைத்து வருவதற்காக கடற்கொள்ளையர்கள் (மனித கடத்தல்காரர்கள்) அடையாளம் கண்டுள்ள முக்கிய வழிகள் மீதான கட்டுப்பாட்டை அதிகரிக்கும்.நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை உத்தரவுப்படி கொவிட் -19 பாதிப்பு பரவுவதை உறுதி செய்வதற்காக புதிய சாலைத் தடுப்புகள் இறுக்கமாகக் கட்டுப்படுத்தப்படுவதால் இந்த வழிகள் கண்காணிக்கப்படும்” என்று அவர் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.


Pengarang :