ரந்தாவ் பாஞ்சாங், மே 4:
இன்று தொடங்கி நிபந்தனைக்குட்பட்ட கட்டுப்பாட்டு ஆணையின் (பிகேபிபி) போது பொருளாதாரத் துறை செயல்பாட்டுக்கு வருவதால், வேளாண்மை மற்றும் உணவுத் துறை அமைச்சு வேளாண்மை விளைப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான தேவையை மறு மதிப்பீடு செய்யும். நடமாடும் கட்டுப்பாட்டு ஆணை (பிகேபி) காலத்தில், உள்ளூர் விவசாய விநியோகம் போதுமானதாக இருப்பதால், பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் அவ்வளவு இல்லை என்று அமைச்சின் துணை அமைச்சர் டத்தோ சே அப்துல்லா மாட் நாவி கூறினார்.
“வெளிநாட்டு இறக்குமதியில் சார்ந்திருக்கும் சூழ்நிலையில் ஏதும் பெரிதாக மாற்றம் இருக்காது. பொருளாதாரத்தின் சில துறைகள் மீண்டும் செயல்பாட்டுக்கு வருவதால், தேவையை நாங்கள் ஆராய்ந்து வருவோம் ” என்று அவர் கூறினார். சே அப்துல்லா முன்னதாக இங்குள்ள குடிநுழைவு , சுங்க, தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் பாதுகாப்பு வளாகத்தில் (ஐ.சி.க்யூ.எஸ்) மலேசிய தனிமைப்படுத்தல் மற்றும் ஆய்வு சேவைகள் இலாகாவின் தனிமைப்படுத்தப்படும் மையத்திற்கு அவர் வருகை புரிந்தார்.