கோலா லம்பூர், மே 7:
நேற்று நள்ளிரவு முதல் மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் வாகனங்கள் மற்றும் தனி நபர்களை பரிசோதனை செய்ய சிலாங்கூர் மாநிலத்தில் மட்டும் ஒன்பது சாலை தடுப்புச் சோதனைகளை சிலாங்கூர் மாநில காவல்துறை ஏற்பாடு செய்ததாக மாநில காவல்துறை தலைவர் டத்தோ நூர் அஸாம் ஜமாலூடின் தெரிவித்தார். இந்த நடவடிக்கைகளில் சிலாங்கூரை விட்டு வெளியே செல்லும் முக்கிய சாலைகளில் நடத்தப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
” சாலை தடுப்புச் சோதனைகள் மற்ற மாநிலங்களை இணைக்கும் எல்லைகளில் நடத்தப்பட்டது. எடுத்துக் காட்டாக சிலாங்கூர் மாநிலத்தை நெகிரி செம்பிலான், பேராக் மற்றும் பகாங் ஆகிய மாநிலங்களோடு இணைக்கும் சாலைகளில் தடுப்புச் சோதனைகள் ஏற்பாடு செய்யப் பட்டது,” என கோலா லம்பூர்-ஈப்போ சாலையின் கிலோ மீட்டர் 14-இல் நடைபெற்ற சாலை தடுப்புச் சோதனை நடவடிக்கையை கண்காணிக்க வந்த போது செய்தியாளர்களிடம் இவ்வாறு பேசினார்.