புத்ராஜெயா, மே 9:
கோவிட்-19 நோய் தொற்றின் விளைவுகள் 12ஆவது மலேசியத் திட்டத்தைப் பாதிக்காது என நிதியமைச்சர் தெங்கு ஸப்ருல் அப்துல் அஸிஸ் கூறினார். 2021ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையான நீண்டகால பொருளாதாரத் திட்டத்தை 12ஆவது மலேசியத் திட்டம் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். கோவிட்-19 வைரஸ் தாக்கத்தின் பாதிப்புகளைத் தொடர்ந்து பொருளாதார மீட்சித் திட்டத்தை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக அவர் சொன்னார். இந்த பொருளாதார மீட்சித் திட்டத்தை புதிய தேசிய கூட்டமைப்பு அரசாங்கம் எல்லா அம்சங்களையும் கருத்தில் கொண்டு செயல்படுத்தும் என்று தெங்கு ஸப்ருல் உறுதி அளித்தார்.
2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் தாக்கல் செய்யப்பட லாம் என அவர் கோடி காட்டினார். நாட்டின் பொருளாதாரத்திற்கு புத்துயிரூட்டும் நடவடிக்கைகளுக்கு 2021ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கவனம் செலுத்தப்படும் என அவர் சொன்னார். 2021-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் அனைத்து தரப்பினரும் பயன் பெறும் வகையில் புதிய திட்டங்களை அறிமுகம் செய்ய பிரதமர் டான்ஸ்ரீ முஹீடின் யாசீன் அமைச்சரவையில் தெரிவித்தாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.