SELANGOR

செந்தோசா சட்ட மன்றத்தில் ஜோம் சொப்பிங் பற்றுச்சீட்டுகள் வழங்கப் பட்டன

கிள்ளான், மே 13:

செந்தோசா சட்ட மன்ற தொகுதியின் தன்னார்வ பணியாளர்கள், நோன்பு பெருநாளை முன்னிட்டு
ஜோம் சொப்பிங் பற்றுச்சீட்டுகளை தகுதி பெற்றவர்களின் வீடுகளுக்கு சென்று வழங்கி வரும் நற்பணிகளை ஆற்றி வருகின்றனர். செந்தோசா சட்ட மன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் தலைமையிலான இக்குழு நிபந்தனைக்குட்பட்ட நடமாடும் கட்டுப்பாடு ஆணையின் (பிகேபிபி) நடைமுறைகளை பின்பற்றி கட்டம் கட்டமாக பற்றுச்சீட்டுகளை விநியோகம் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிலாங்கூர் மாநில அரசின் நன்முயற்சியை மக்களுக்கு கொண்டு சென்று பிகேபிபி காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் பொருளாதார சுமையை குறைக்க உதவி புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

 


Pengarang :