கோலா லம்பூர், ஜூன் 2:
துன் டாக்டர் மகாதீர் முகமட் மற்றும் மேலும் நீக்கப்பட்ட பெர்சத்து கட்சியின் நான்கு தலைவர்களும் மக்களின் அதிகாரப்பூர்வ தேர்வு பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் அரசாங்கம் ஆகும் என நம்பிக்கை தெரிவித்தனர். இன்று கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் டான்ஸ்ரீ முஹீடின் யாசீன் வழிநடத்தும் அரசாங்கத்திடம் பெர்சத்து அங்கத்தினர்கள் அடிபணிய வேண்டாம் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
” தற்போதைய அரசாங்கம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அல்ல. மக்களின் அதிகாரப்பூர்வ தேர்வு பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி அரசாங்கமே. ஆகவே, மக்களின் ஆணையை மீட்டெடுக்க வேண்டும்,” என இந்த அறிக்கையில் துன் டாக்டர் மகாதீர் முகமட், டத்தோ ஸ்ரீ முக்ரீஸ் மகாதீர், சைட் சாடிக் சைட் ரஹ்மான், டத்தோ அமிருடின் ஹாம்சா மற்றும் டாக்டர் மஸ்லி மாலிக் ஆகியோர் கூட்டாக கையொப்பம் இட்டுள்ளனர்.