ஷா ஆலம், ஜூன் 2:
ஷா ஆலம் செக்சன் 13-இல் அமைந்துள்ள பிரபலமான பேரங்காடி எட்டு நாட்களாக மூடும்படி கட்டளை பிறப்பித்துள்ளது. தேசிய பாதுகாப்பு மன்றம் (எம்கெஎன்) வழிவகுத்த சீரான செயலாக்க நடைமுறைகளை (எஸ்ஓபி) பின்பற்றாத காரணத்தால் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று சிலாங்கூர் மாநில சுகாதார இலாகாவின் இயக்குநர் டத்தோ டாக்டர் ஷாரி நாடிமான் தெரிவித்தார். எதிர் வரும் ஜூன் 8 வரை மூட உத்தரவு பிறப்பித்துள்ளது என்றார் அவர்.
எட்டு நாள் காலக்கெடு சம்பந்தப்பட்ட பிரபல பேரங்காடி நிபந்தனைக்குட்பட்ட நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபிபி) காலகட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட எஸ்ஓபிகளை பின்பற்ற வேண்டும் என்று டாக்டர் ஷாரி கூறினார்.
” கோவிட்-19 தொற்று நோய் சம்பவங்கள் தொடர்ந்து பரவி வரும் காலகட்டத்தில் இவர்கள் எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும். வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்பட்டிருக்க வேண்டும்,” என பெர்னாமாவிடம் கூறினார்.