ஷா ஆலம், ஜூலை 13:
சிலாங்கூர் மாநில புதிய துணைச் சபாநாயகராக மோரிப் சட்டமன்ற உறுப்பினர் ஹாஸ்நூல் பஹாரூடின் இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு முன்பு இருந்த செமந்தா சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் டாக்டர் டாரோயா அல்வி பதவியை துறந்த நிலையில், ஹாஸ்நூல் இந்த பதவிக்கு நியமனம் பெற்றுள்ளார். இவரின் நியமனத்தை சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று சட்ட மன்ற கூட்டத்தில் அறிவித்தார்.
பதவிப் பிரமாணம் இன்று சிலாங்கூர் மாநில சட்டமன்ற சபாநாயகர் எங் சுவி லிம் முன்னிலையில் நடைபெற்றது. இன்று தொடங்கிய சட்டமன்றக் கூட்டத் தொடர் எதிர் வரும் ஜூலை 24 வரை தொடர்ந்து நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.