NATIONAL

கடன் தள்ளுபடிக்கான காலக்கெடுவை மேலும் ஆறு மாதம் நீட்டிக்க வேண்டும் !!!

புத்ராஜெயா, ஜூலை 19:

கடன் தள்ளுபடிக்கான காலக்கெடுவை இன்னும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்றும் வணிகங்களையும் காப்பாற்ற முடியும் என்று முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.

“ஜப்பான் செய்ததைப் போல இன்னும் ஆறு மாதங்களுக்கு அரசாங்கம் கடன் தள்ளுபடி காலக்கெடுவை நீட்டிக்கும் என்று நாங்கள் (எதிர்க்கட்சி) நம்புகிறோம். மற்ற விஷயங்கள் இருந்தாலும் இதை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்,” என்று அவர் கூறினார்.

பொருளாதாரத்தையும் மக்களையும் புதுப்பிக்க நிதி வாழ்வாதாரங்கள் முக்கியம் என்று அவர் கூறினார். மார்ச் 25- ஆம் தேதி, பிரதமர் டான்ஸ்ரீ முஹீடின் யாசின் செப்டம்பர் 30- ஆம் தேதியுடன் முடிவடையும் கடன் தள்ளுபடி காலக்கெடுவை அறிவித்தார்.


Pengarang :